ISHRAE ஓசூர் அத்தியாயத்தின் 2025-26 ஆண்டிற்கான ஒரு நாள் பயிற்சி நிகழ்ச்சி, 2025 ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஓசூர் தொழிலதிபர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது. சேயோன் ஆர்கானிக் ஃபார்மின் தலைவரும் நிறுவனருமான டாக்டர் . த முருகசெல்வம் அவர்கள் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, பசுமை நிலைத்தன்மை குறித்து விரிவுரை ஆற்றினார். அவரது வருகை மற்றும் விரிவுரைக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.